பாரம்பரியத்தின் சிறப்பு நம்மை பிரமிக்க வைப்பவையாக உள்ளன. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானவை உணவு, உடை, உறையுள். இவற்றை தட்ப வெப்ப நிலைக்கேற்ப அழகாகக் கையாண்டு பாரம்பரிய முறைகளின் வாயிலாக அடுத்தடுத்த சந்ததிகளுக்குப் பயணப்படுத்திய சிறப்பு வாய்ந்த பாரம்பரியம் தமிழர்களுக்கு உரியது.
எந்த வகை நோயானாலும் அதற்குள்ளே மருந்து இருக்கும். “உணவும் மருந்தும் ஒன்றே” என்ற நிலைப்பாட்டிற்கேற்ப தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களும் அதன் பயன்களும் வியப்படையச் செய்பவையாக உள்ளன. பண்டைத் தமிழ் மக்கள் அறம் செய்வதை பண்பாட்டின் கூறாகக் கருதிச் செயல்பட்டனர்.
உலகில் உள்ள பல பண்பாடு கலாச்சாரங்களில் தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் சிறப்பினை பெறுகின்றது. ஒரு இனத்தின் அடையாளமாக இருக்கும் இவற்றை பாதுகாத்து நம் அடுத்த தலைமுறையினருக்கு கடத்த வேண்டியது நமது பொறுப்பாகும்.
பாரம்பரியத்தின் சிறப்பு நம்மை பிரமிக்க வைப்பவையாக உள்ளன. மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானவை உணவு, உடை, உறையுள். இவற்றை தட்ப வெப்ப நிலைக்கேற்ப அழகாகக் கையாண்டு பாரம்பரிய முறைகளின் வாயிலாக அடுத்தடுத்த சந்ததிகளுக்குப் பயணப்படுத்திய சிறப்பு வாய்ந்த பாரம்பரியம் தமிழர்களுக்கு உரியது.
எந்த வகை நோயானாலும் அதற்குள்ளே மருந்து இருக்கும். “உணவும் மருந்தும் ஒன்றே” என்ற நிலைப்பாட்டிற்கேற்ப தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களும் அதன் பயன்களும் வியப்படையச் செய்பவையாக உள்ளன. பண்டைத் தமிழ் மக்கள் அறம் செய்வதை பண்பாட்டின் கூறாகக் கருதிச் செயல்பட்டனர்.
பண்பாடு என்பது பண்படுவது எனலாம். பொதுவாகப் பண்பாடு மனிதனின் நடவடிக்கைகளை குறிக்கின்றது. நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுத்த பெருமை தமிழுக்கு உண்டு.
மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை விட எவ்வாறு வாழக்கூடாது என்ற வாழ்வியலைக் கற்றுக்கொடுத்தது தமிழர் பண்பாடாகும். மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர்.
தமிழர் வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்து வந்தமை உலகின் பண்பாடுகளின் சிகரமாக கருதப்படுகின்றது.
தமிழ் மொழி தோன்றிய காலம் முதலே மக்களின் பண்பாடு கலாச்சாரம் என்பன வளர்ச்சி அடைந்தன. பண்பாட்டின் கூறுகளாக வீரம்⸴ கலை⸴ விருந்தோம்பல்⸴ கற்புடமை⸴ வாழ்வியல்⸴ கொடை போன்ற பலவற்றை குறிப்பிடலாம்.
உலகில் உள்ள பல பண்பாடுகளில் சிறந்ததும்⸴ தொன்மையானதும் தமிழ் மக்களின் பண்பாடு ஆகும். பண்பாடும் கலாச்சாரமும் தமிழர் வாழ்க்கையில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
தமிழர்களின் கலாச்சாரமானது தமிழ் மக்களின் மத்தியில் மட்டுமன்றி ஏனையவர்களிடமும் மதிப்புக்குரிய ஒரு கலாச்சாரமாக திகழ்கின்றது.
தமிழர் கலாசாரம் மொழி, இசை, ஆடை, பாரம்பரியம், கோவில்கள், நடனம்⸴ கல்வெட்டுகள்⸴ இலக்கியங்கள்⸴ பழக்கவழக்கங்கள்⸴ விருந்தினர் உபசரிப்பு⸴ சமய விழாக்கள் கைவைத்தியம் போன்ற பலவற்றில் மேலோங்கி காணப்படுகின்றது.
தமிழர்களின் கலாச்சாரத்தில் முன்னோர்கள் மிகப்பெரிய பங்களிப்பு செய்துள்ளனர். தமிழ் நாட்டில் உள்ள பல கோவில்களில் தமிழ்க் கலாச்சாரம் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக தஞ்சாவூர் கோவிலினைக் கூறலாம். கோவில்கள் தமிழர்களின் கட்டிடக் கலையின் சிறப்பினை வெளிப்படுத்துகின்றன.
அறிவியல் முறைகளுடன் கூடிய பழக்கவழக்கங்கள் என்பனவும் தமிழர் கலாச்சாரத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். பாரம்பரியமான சமையல் முறைகள்⸴ விருந்து பரிமாறும் முறை⸴ விருந்தினரை உபசரிக்கும் முறை என்பனவும் உணவுப் பழக்க வழக்கங்களின் பெருமையை கூறுகின்றன.
இயல், இசை, நாடகம் போன்றன நம் கலாச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கின்றது. கோலாட்டம்⸴ கும்மி⸴ காவடி, தெருக்கூத்து⸴ ஜல்லிக் கட்டு போன்றனவும் தமிழர்களுக்கே உரித்தான அம்சங்களாகும்.
தமிழர் கலாச்சாரத்தில் இயற்கை மற்றும் முன்னோர்களை கடவுளாக வழிபடும் முறை காணப்படுகின்றது.
திருமணமான பெண்கள் குங்குமப் பொட்டு மற்றும் தாலிக்கு முக்கியத்துவம் வழங்குவதுடன் அதனை தம்முடனே அணிந்திருப்பர். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டுடன் இல்லற வாழ்க்கைமுறை கடைப்பிடிக்கப்படுவது சிறப்புக்குரியதாகும்.
தமிழர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதனை சங்ககால இலக்கியங்கள் விளங்குகின்றன.
தமிழரின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்றாகவிருந்தோம்பல் காணப்படுகின்றது. முகம் தெரிந்தவர்கள் மட்டுமன்றி முகம் தெரியாதவர்களையும் அன்போடு உபசரித்து அவர்களுக்கு உணவளிக்கும் பண்பைத் தமிழர்கள் கொண்டுள்ளனர்.
விருந்தோம்பலை இல்லத்தரசியின் கடமையாக வேறு எந்த இனமும் நாடும் சுட்டிக்காட்டவில்லை. வந்தவர்களை கைகூப்பி வரவேற்று இருப்பதை தந்து இன்முகத்துடன் பசியாற்றுவது அன்றைய வழக்கம்.
விருந்தோம்பல் பண்புக்கு சான்றாக விளங்குவது அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகளில் காணப்படும் திண்ணைகள் ஆகும். விருந்தோம்பலின் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
தமிழர்கள் கோவில்களில் தெய்வங்களுக்கு படையல் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். குலதெய்வ கோவில்களிலும் படையலிட்டு அனைவரும் கூடி உண்டு மகிழ்வர்.
இறந்தவர்களுக்காக இறந்த நாளிலோ அல்லது வேறு ஒரு நாளிலோ ஆண்டுக்கு ஒருமுறை படையல் இடுவர்.
பிள்ளைகளுக்கு திருமணம் எனில் குலம் தழைக்க வேண்டும் என்பதற்காக திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு முன்னோர்களுக்கு படையல் இடுவது வழக்கம்.
இன்றைய உலகமயமாக்கல், மேலைநாட்டு கலாச்சார ஊடுருவல்⸴ தொடர்பாடல் வளர்ச்சி⸴ பயணம் போன்ற பல்வேறு அம்சங்கள் தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன.
ஆடைகள்⸴ வைத்திய முறை⸴ சமய விழாக்கள்⸴ பழக்க வழக்கங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தமிழர்களின் தூய பண்பாட்டுக் கலாச்சாரத்தினை காண்பது அரிதாக உள்ளது.
மேலை நாட்டு கலாச்சாரத்தின் ஊடுருவல் காரணமாகத் தமிழ்க் கலாசார உடைகள் மாறுபட்டு விட்டன. வைத்திய முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சித்த வைத்தியம் இன்று கிராமப்புறங்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே காணமுடிகின்றது.
வாழை இலையில் உணவு போடும் முறை தமிழர்களின் கலாச்சாரம் ஆகும். ஆனால் இன்று அம்முறை பெரிதளவு மாறிவிட்டது. விரதங்களைக் கடைப்பிடிக்கும் போது மட்டும் வாழை இலைகளில் உண்ணும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. விருந்தோம்பல் முறையில் கூட மேலைத்தேய கலாச்சாரம் பின்பற்றப்படுவதைக் காணமுடிகின்றது.
தனது இனத்தினுடைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டினை விட்டுக் கொடுப்பது பிறப்புரிமையை விட்டுக் கொடுப்பதற்கு சமம் ஆகும்.
நம் முன்னோர்கள் பாதுகாத்து கடைப்பிடித்த பண்பாட்டுக் கலாச்சாரங்களை நாம் பேணிப் பாதுகாப்பது நமது தலையாய கடமையாகும்.
பிற கலாச்சாரங்களின் ஊடுருவலைத் தவிர்த்தல்⸴ நமது பண்பாட்டு விழாக்கள்⸴ பண்டிகைகளைக் கொண்டாடுதல்⸴ பாரம்பரிய நிகழ்வுகளை நடாத்துதல்⸴ விருந்தோம்பல் பண்பை வளர்த்தல்⸴ நமது கலாச்சாரம் பண்பாடு பற்றிய புரிதலை ஏற்படுத்தல்⸴ இவற்றை அடுத்த சந்ததியினருக்கு கற்பித்தல் என்பன எமது கடமையாகும்.
மொழி கடந்து அனைவரிடத்திலும் அன்பு பாராட்டியவர்கள் பண்டைய தமிழர்கள். இவர்கள் நமக்கு அளித்துள்ள கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் பெரும் பொக்கிஷங்கள் ஆகும்.
இவற்றைப் பேணிக்காப்பதும் அதன்வழி நடந்து கொள்வதும் தமிழர்களாகிய நம் அனைவரதும் கடமையாகும். கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தனித்தன்மை மங்காது செயற்படுவோம் தமிழர் பெருமை காப்போம்.
உலகின் மூத்த குடியான தமிழரினுடைய பண்பாடு மற்றும் கலாசாரம் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு பேணப்படல் வேண்டும். பல தலைமுறை கடந்தாலும் அதன் தனித்துவம் மங்காது தலைசிறந்ததாகப் போற்றப்படும்.
பண்பாடு அழியக்கூடாது கலாச்சாரம் மாற்றப்படக் கூடாது. என்பதனை மனதிற் கொண்டு நாம் அனைவரும் செயற்படல் வேண்டும்.
3 Courses